Fri. May 3rd, 2024

பருத்தித்துறை பகுதியில் மீன் சேகரித்து வைக்கும் வாடி நிலையம் எரிந்ததில் இரு சகோதரர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

பருத்தித்துறை பகுதியில் மீன் சேகரித்து வைக்கும் வாடி நிலையம் எரிந்ததில் இரு சகோதரர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை முனைப் பகுதியில் இயங்கும் மீன்வாடியே இவ்வாறு எரிந்துள்ளதுடன், மீன்வாடிக்குள் இருந்த இரு சகோதரர்கள் உடல் கருகி இறந்துள்ளனர்.
சம்பவத்தில் ஹட்டன் உப்புசலாவை
மேல் பிரிவு, பிள்ளையார் லோமண்ட் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் ரவி (வயது 38), மற்றும் வேலாயுதம் புவனேஸ்வரம் (வயது 46) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மீன் வாடி எரிந்தமைக்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்