Fri. May 3rd, 2024

கரவெட்டி பிரதேச செயலாளரின் நெகிழ்ச்சியான செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டு

கரவெட்டி பிரதேச செயலாளரின் நெகிழ்ச்சியான செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

கரவெட்டி பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பவுண் மோதிரம் ஒன்றை தவறவிட்டவருக்கு கரவெட்டிப் பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன் அவர்களால் கண்டெடுக்கப்பட்டு வழங்கப்பட்ட சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.
குறித்த நபர் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு தனது மோதிரத்தை வங்கியில் அடகு வைப்பதற்காக தனது ஜீன்ஸ் பொக்கற்றில் வைத்தபடி வேறொரு வேலையை முடிப்பதற்காக பிரதேச செயலகத்திற்கு சென்று, அதன் பின்னர் வங்கி செல்வதற்காக மோட்டார் சையிக்கிள் திறப்பை எடுத்த போது, பேப்பரினால் சுற்றி வைக்கப்பட்ட மோதிரம் கீழே விழுந்துள்ளது. இதனை அவதானித்த பிரதேச செயலாளர்,  கீழே விழுந்த பேப்பரைப் பார்த்த போது உள்ளே மோதிரம் இருந்ததை அவதானித்துள்ளார். மோட்டார் சையிக்கிளில் செல்ல ஆரம்பித்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு அவரின் மோதிரம் தான் என்பதனை உறுதி செய்து வழங்கியுள்ளார். பொருளாதார நெருக்கடியால் மோதிரத்தை அடகு  வைப்பதற்காக எடுத்துச் சென்ற மோதிரம் கைக்கு கிடைத்ததையடுத்து பிரதேச செயலாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்