பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 8 தடவை தோல்வியடைந்த பெண்; ஒன்பதாவது முறை பிறந்த குழந்தை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 8 தடவை தோல்வியடைந்த பெண்; ஒன்பதாவது முறை பிறந்த குழந்தையால் வைத்தியர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத் தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்துள்ளார்.புத்தாண்டு தினமான நேற்று இக் குழந்தையை பிரசவித்துள்ளார்.
24 வயதான மேற்படி தாயார், திருமணம் முடித்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக எட்டுத்தடவை கருச்சிதைவு ஏற்ப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று புது வருடதினத்தில் ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்தார்.மகப்பேற்று வைத்திய நிபுணர் சிவராஜா சிஜெதரா மருத்துவக்குழுவனரே மேற்படி தாய்க்கு சிகிச்சை வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.