பருத்தித்துறையில் சமையல் எரிவாயு வழங்கப்படுவதான தவறான செய்தி – பலரும் பாதிப்பு
பருத்தித்துறை பகுதியில் சமையல் எரிவாயு வழங்கப்படுன்றது எனும் தவறான செய்தி பரவியதால் பல இடங்களிலிருந்தும் மக்கள் பருத்தித்துறை நகருக்கு வருகை தந்து ஏமாற்றம் அடைந்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் இன்று பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை பகுதியில் இன்று சமையல் எரிவாயு வழங்கப்பட்டு வருவதான தவறான செய்தி மக்கள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவியது. இதனால் வடமராட்சி கிழக்கு பகுதி உட்பட பல பாகங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் பருத்தித்துறை நகர்ப் பகுதியில் ஒன்றுகூடியுள்ளனர். பருத்தித்துறை பெரிய கோட்டு பிள்ளையார் ஆலயத்தில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடி காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். லிற்றோ நிறுவனம் இன்று சமையல் எரிவாயு விநியோகம் நடைபெறாது என அறிவிக்கப்பட்ட போதிலும் தவறான செய்தி பரவலாம் பலரும் சிரமமடைந்துள்ளனர்.
இதேவேளை வவுனியா நகரில் திருட்டு சந்தையில் 12.5 கிலோ சமையல் எரிவாயு 15 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் கவனமெடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.