பருத்தித்துறையில் கண்புரை பரிசோதனை முகாம்
கண்புரை சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்களைப் பரிசோதனை செய்து தெரிவுசெய்யும் கண்பரிசோதனை நாளை சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்; நடைபெறவுள்ளது.
இதில் தெரிவு செய்யப்படும் நோயாளர்களுக்கான கண்புரை சத்திரசிகிச்சை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக செய்யப்படும்.
எனவே கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள நோயாளர்கள் மேற்படி கண்பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு தங்கள் பெயர்களைப் பதிவுசெய்யுமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.