Tue. May 7th, 2024

பரபரப்பான கூடைப்பந்தாட்ட இறுதியாட்டம் ஏஞ்சல் அணி சம்பியன்

யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கம் தமது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 7வது வருடமாக நடாத்தி வரும் பாடசாலைகளுக்கிடையிலான இளையோருக்கான கூடைப்பந்தாட்ட தொடரில் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

18 அணிகள் பங்குபற்றிய யாழ்மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான இளையோருக்கான 15 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான இறுதியாட்டம் கடந்த புதன்கிழமை யாழ்ப்பாண கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியை எதிர்த்து சென்ஜோன்ஸ் கல்லூரி அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணி முன்னிலை வகித்த போதிலும் இரண்டாவது பாதியாட்டத்தில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னேறியது. இதனால் ஆட்டம் விறுவிறுப்பின் உச்சக் கட்டத்தை எட்டியது. இருப்பினும் ஆட்ட நேர முடிவில் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணி 41:36 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
3ம் இடத்தை யாழ் இந்துக் கல்லூரி அணி பெற்றுக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்