Wed. May 8th, 2024

இளையோருக்கான கூடைப்பந்தாட்டம் உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு வெண்கலம்

யாழ்மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான இளையோருக்கான கூடைப்பந்தாட்ட தொடரில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கம் தமது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 7 வருடங்களாக இளையோருக்கான கூடைப்பந்தாட்ட தொடரை  நடாத்தி வருகின்றனர்.
இதில் யாழ்மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இளையோருக்கான  கூடைப்பந்தாட்ட போட்டியின் 3ம் இடத்திற்கான போட்டிகள் கடந்த புதன்கிழமை யாழ்ப்பாண கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.
இதில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து வேலணை மத்திய கல்லூரி அணி மோதியது. முதல் இரு கால்பகுதியாட்டத்திலும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி 3:0, 8:2 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர். இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்திலும் இரு அணிகளும் சம பலத்துடன் மோதினர்.  இருப்பினும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி 16:8, 20:10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றினர்.
குறித்த போட்டியில் 18 அணிகள் பங்குபற்றியிருந்தனர். இதில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி முதன்முறையாக குறித்த தொடரில் பங்குபற்றியிருந்தனர்.
யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கம் யாழ்மாவட்ட பாடசாலைகள் மற்றும் கழகங்களுகிடையிலான பல வகையான சுற்றுப் போட்டிகளை வைத்து புதுப்புது வீரர்களை உருவாக்கி தேசிய ரீதியில் தமது அபாரமான சேவையை ஆற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்