Sat. Apr 27th, 2024

பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான கிரிக்கெட் மன்னார் மாவட்ட செயலகம் சம்பியன்

வடக்கு மாகாணத்தின் மாவட்ட செயலகங்களுக்கிடையிலான பதவிநிலை  உத்தியோகத்தர்களுக்கான
சிநேகபூர்வ மென்பந்து துடுப்பாட்டப் போட்டியில் மன்னார் மாவட்ட செயலக அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்  கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
2024ஆம்  ஆண்டுக்கான வடக்கு மாகாண மாவட்ட செயலகங்களுக்கு இடையிலான  மென்பந்து துடுப்பாட்டப் போட்டியில் முதலாம் இடத்தினை  மன்னார் மாவட்ட செயலகமும் இரண்டாம் இடத்தினை யாழ் மாவட்ட செயலகமும் பெற்றுக்கொண்டுள்ளன.
இத் துடுப்பாட்டப் போட்டியில் பிரதம விருந்தினர்களாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அருளம்பலம்  உமாமகேஸ்வரன் , மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி  கனகேஸ்வரன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
2025 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண மாவட்ட செயலகங்களுக்கு இடையிலான  மென்பந்து துடுப்பாட்டப்போட்டி மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்