நெல்லியடி நகரில் வேகமாக செல்லும் மண் லொறிகளால் ஆபத்து
மண் ஏற்றி வரும் டிப்பர் வாகன தொடர் அணிகள் தினமும் நெல்லியடி நகர்ப் பகுதி ஊடாக காலையிலிருந்து மாலை வரையும் சன நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் வேகமாக பயணிப்பதால் விபத்துக்கள் ஏற்பட கூடிய சந்தர்ப்பங்கள் காணக்கூடியதாக இருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். தற்பொழுது பாடசாலைகளும் ஆரம்பித்து இருப்பதினால் நகரப்பகுதியில் சன நெரிசல் அதிகமாக காணப்படுகின்றது. எனவே மாற்று வழி ஒன்றை அல்லது மாற்று நேரம் ஒன்றை கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் போலீஸ் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுசென்று இருக்கிறார்கள்.