Sat. May 18th, 2024

பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக சுவரொட்டியூடான விழிப்புணர்வு 

பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும்  அவற்றுக்கான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கான விழிப்புணர்வு சுவரொட்டிகளை உருவாக்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இன்று (09) ” விழிப்புணர்வு சுவரொட்டிகள்”  மாவட்ட செயலக அரசாங்க அதிபர் க. மகேசன்  அவர்களிடம் அரச சார்பற்ற நிறுவனங்களான கியூமானிற்றி அன்ட் இன்குளூசன், கமிட், ஜெசாக், விழுது ஆகியன கையளித்தன.
மேலும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒன்பது வகையான விழிப்புணர்வு சுவரொட்டிகள் உருவாக்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட செயலக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச்செயற்திட்டமானது யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, முல்லைத்தீவு  மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்