நெல்லியடி சந்தையில் இன்று இடம்பெறவுள்ள கொரோனோ சோதனை
15.12.2020 இன்று நெல்லியடி புதிய சந்தை பகுதியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கும் சந்தை சூழல் பகுதியில் காணப்படும் வர்த்தக நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா சம்பந்தமான பிசிஆர் பரிசோதனைகள் பிற்பகல் ஒரு மணியளவில் கரவெட்டி சுகாதார பணிமனை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. இதற்கு அப்பகுதி மரக்கறி வியாபாரிகளும் வர்த்தகர்களும் நெல்லியடி வர்த்தக சங்கத்தினரும் பூரண ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கிறார்கள்.