நெல்லியடியில் PCR பரிசோதனை ஆரம்பம்
நெல்லியடி பொதுச் சந்தையில் கரவெட்டி சுகாதார பிரிவினரால் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு PCR பரிசோதனை நடைபெற்று வருகின்றது.நெல்லியடி பொதுச் சந்தையுடன் தொடர்புடைய 113 பேருக்கு இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கரவெட்டி சுகாதார வைத்தியர் செந்தூரன் அவர்களால் இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நெல்லியடி பொதுச் சந்தையுடன் தொடர்புடைய மரக்கறி வியாபாரிகள், மீன் விற்பனையாளர்கள், இறைச்சி விற்பனையாளர்கள், பொதுச் சந்தையில் பல்பொருள் வாணிபத்தில் ஈடுபடுவோர், மற்றும் கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் என 113 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.