Sat. Apr 27th, 2024

நெல்லியடி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் திருட்டு

நெல்லியடியில் இயங்கும் கட்டைவேலி பல்நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று அதிகாலை 1.45 மணியளவில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணிபுரிபவரின் 4லட்சம் பெறுமதியான தொலைபேசி மற்றும் 38 ஆயிரம் ரூபா பணம் என்பனவே களவாடப்பட்டுள்ளது.
குறித்த பணியாளர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நித்திரை கொண்டு இருக்கும் போது எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் பின்புறமாக உள்ள யன்னல் கதவை திறந்து உள்புகுந்த திருடன் குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டமை எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை நெல்லியடி பொலீசார் கைது செய்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்