Thu. May 2nd, 2024

நெல்லியடியில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் உயர் அதிகாரி தலையீட்டால் மீட்பு

ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் போது பொறுப்பற்ற வகையில் வீதியில் நடமாடியோரின் வாகனங்களில் ஒரு  வாகனத்தை மாத்திரம்  பருத்தித்துறை உதவிப் பொலீஸ் உத்தியோகத்தரின் தலையீட்டால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லியடியில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் போது பொறுப்பற்ற வகையில் வீதியில் நடமாடியோரின் வாகனங்கள் சுமார் 45 வாகனங்கள் நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் அன்றாடம் உழைத்து வாழும் மீன் விற்பனையாளர்கள் மற்றும் கூலி தொழிலாளிகளின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டள்ளது. ஆனால் ஒருவரின் மோட்டார் சையிக்கிள் வாகனம் மாத்திரம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பருத்தித்துறை உதவிப் பொலீஸ் உத்தியோகத்தரின் தலையீடே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்