Thu. May 2nd, 2024

வடமராட்சி பகுதியில் 8 கிலோ கஞ்சா மீட்பு, ஒருவர் கைது

வடமராட்சி வியாபாரிமூலை பகுதியில் 8கிலோ கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில்
நெல்லியடி பொலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புலனாய்வு பிரிவினரால் வியாபாரிமூலை பகுதியில் கஞ்சா வாங்குவது போல் பாசாங்கு செய்தனர். அப்போது  26 வயதுடைய இளைஞர் ஒருவர் இரகசிய பொலீஸாருக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்ற போது கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்