Fri. May 3rd, 2024

நெல்லியடியில் காஸ் சிலிண்டர் திருட்டு

நெல்லியடி பகுதியில் வீடொன்றில் இருந்து  காஸ் சிலிண்டர் களவாடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிலேயே இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்போது காஸ் அடுப்புகள் வெடிப்பு சம்பவத்தையடுத்து, பாதுகாப்பு கருதி காஸ் சிலிண்டரை வெளியில் அதற்கென பிரத்தியேகமான ஓர் இடத்தில் வைத்துள்ளனர். நேற்று அவர்கள் பாடசாலைக்கு கடமைக்குச் சென்று திரும்பி வந்து பார்த்த போது காஸ் சிலிண்டர் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்