Sat. Apr 20th, 2024

கரணவாய் மத்தி தொடர் லயன்ஸ் கிங் அணி வெற்றி

இறுதிவரை போராடி இறுதி நிமிடத்தில் திடீர் திருப்பத்தால் லயன்ஸ் கிங் அணி வெற்றி பெற்றுள்ளது.
கரணவாய் மத்தி விளையாட்டு கழகம் நடாத்தும் 25 வயதிற்குட்பட்ட வடமராட்சி வீரர்களுக்கிடையிலான பிரிமியர் லீக் கால்பந்தாட்ட தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லயன்ஸ் கிங் அணி வெற்றி பெற்றுள்ளது.
குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொலின்ஸ் ரைகர்ஸ் அணியை எதிர்த்து லயன்ஸ் கிங் அணி மோதியது. முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். கொலின்ஸ் ரைகர்ஸ் அணி வீரர் பிருந்தாபன் 28வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த வாய்பை சரியாக பயன்படுத்தி ஒரு கோலைப் பதிவு செய்தார். இதனால் முதல் பாதியாட்டத்தில் கொலின்ஸ் ரைகர்ஸ் அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர். இரண்டாவது பாதியாட்டம் இரு அணிகளுக்கும் சவாலாக அமைந்தது. இரு பக்க கோல் கம்பங்களை பந்து சென்ற போதும் கோல் பெறும் வாய்ப்புக்கள் நழுவ விடப்பட்டது.  இருப்பினும் 46 வது நிமிடத்தில் லயன்ஸ் கிங் அணிக்கு நேர் உதை கிடைத்தது. இதனை சாருஜன் சரியாக பயன்படுத்திக் கோலாக்க கோல்களின் எண்ணிக்கை சமநிலைப்படுத்தினார். இதனால் ஆட்டம் விறுவிறுப்பின் உச்சக்கட்டத்தை எட்டியது. இறுதி நிமிடத்தில் லயன்ஸ் கிங் அணி வீரர் டிபில்ஸன் ஆகாயத்தில் உயர்த்திய பந்தை மதுசாந் தலையால் அடித்து கோலாக்க ஆட்ட நேர முடிவில் லயன்ஸ் கிங் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்