Tue. Apr 30th, 2024

நெல்லியடியில் அட்டைக்கு எரிபொருள்- முகாமையாளர் அறிவிப்பு

நெல்லியடி எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் அட்டைக்கே எரிபொருள் வழங்கப்படுவதாக கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கறுப்புச் சந்தைகளில் பெற்றோல் விற்பனையை தடைசெய்து பாவனையாளர்கள் தட்டுப்பாடின்றி பெற்றோல் விநியோகத்தை மேற்கொள்ள அட்டைகளை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இன்றைய தினம் சிலர் அட்டையை பெற்றுக் கொள்ளாமல் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்களை திருப்பி அனுப்பாமல் மோட்டார் சையிக்கிளுக்கு 500 ரூபாவிற்கும், முச்சக்கர வண்டிகளுக்கு ஆயிரம் ரூபாவிற்கும்,  காருக்கு இரண்டாயிரம் ரூபாவிற்கும் வழங்குவதோடு வாகன இலக்கத்தை பதிவு செய்து அடுத்த முறை அட்டையின்றி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்