நுணுவில் பிள்ளையார் ஆலயத்தில் நகைகள் திருட்டு
நுணுவில் பிள்ளையார் ஆலயத்தில் பல லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இக் கொள்ளைச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றிருக்கலாம் என நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமராட்சி கரவெட்டி பகுதியில் உள்ள நுணுவில் பிள்ளையார் ஆலயத்தில் பல லட்சம் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டுள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.