Mon. Apr 29th, 2024

நெல்லியடி கடத்தல் மற்றும் பாலியல் சித்திரவதை குற்றவாளிகள் சரணடைவு, நாளை அடையாள அணிவகுப்பு

அண்மையில் கரவெட்டியில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் பாலியல் சித்திரவதை குற்ற சாட்டில் மறைந்திருந்த இருவர் நெல்லியடி போலீசில் சரணடைந்துள்ளார். இவர்கள் நேற்று முன்தினம் சட்டத்தரணி மூலம் சரணடைந்துள்ளார்கள். இந்த குற்ற சாட்டில் 9 பேர் தேடப்பட்டு வந்தநிலையில் இருவர் சணடைந்துள்ளார்கள். இது தொடர்பாக அடையாள அணிவகுப்பு நாளையத்தினம் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது
சாதி மாறி இடம்பெற்ற காதல் சம்பவத்தில் ,காதல் ஜோடி ஓடி மறைந்த நிலையில் , குறித்த காதல் ஜோடியில் உள்ள பெண்ணின் தாய் மற்றும் 14 வயது சகோதரர் கடத்தப்பட்டு துன்பறுத்தப்பட்டிருந்த நிலையில் , நெல்லியடி போலீஸாரால் சிறுவன் அன்றயதினம் மீட்க்கப்பட்ட நிலையில் தயார் அடுத்தநாள் இரவு நெல்லியடி நகரில் கடத்தல் காரர்களால் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தயார் பாலியல் சித்திரவதைக்கு உள்ப்பட்டதாக நெல்லியடி போலீசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்