நாவற்குழி பாலத்திற்கு அருகாமையில் குடும்பஸ்தர் தற்கொலை
யாழ்ப்பாணம் – நாவற்குழி பாலத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று 19/5/2020 செவ்வாய்க்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில், இன்று (19) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.