Tue. Apr 30th, 2024

பலத்த காற்றுடன் கூடிய மழைகாரணமாக வல்வையில் பாரிய மரம் சரிந்தது

வல்வை சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் உள்ள பழமை வாய்ந்த இத்தி மரம் குடைசாய்ந்து உள்ளது

பருத்தித்துறை காங்கேசன்துறை வீதி 766 வல்வெட்டித்துறை வீதியின் குறுக்காக இந்த மரம் விழுந்தமையினால் வீதி சில மணிநேரம் துண்டிக்கப்பட்டிருந்தது

இந்து சமுத்திரத்தில் புயல் மையம் கொண்டுள்ள மையினால் நேற்றையதினம் அதிகூடிய காற்றுடன் மழை பெய்ததன் விளைவாக மரமானது குடை சாய்ந்துள்ளது.

தொலைபேசி கம்பங்கள் முறிந்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

மற்றும் இதனால்  இந்த பகுதியில் உள்ள  சில வீடுகளில் மின் உதிரிபாகங்கள் பழுதடைந்துள்ளன

இம்மரத்தினை கிராம மக்கள் நகர சபையினர் மற்றும் இராணுவத்தினர் சேர்ந்து வீதி தடையினை அகற்றியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்