Fri. May 3rd, 2024

நாளை யாழில் பல இடங்களில் மின்வெட்டு

வடமாகாணத்தில் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக 9 மணித்தியால மின் வெட்டு நடைபெறவுள்ளது.
க.பொ.த. உயர்தர பரீட்சைகளுக்காக இந்த பராமரிப்பு வேலைகளுக்காக மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்வெட்டு நடைபெறும் என மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி 2023-02-19 ஞாயிறு காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில் அண்ணா பண்ணை, அங்கிலிப்பாய் இணுவில், உரும்பிராய், உரும்பிராய் சந்தை, விளாத்தியடி – மருதானர்மடம் மணியந்தோட்டம் ஐஸ் தொழிற்சாலை, கொழும்புத்துறை, மணியந்தோட்டம், பாசையூர், புங்கங்குளம், உதயபுரம், செல்வ மஹால் திருமண மண்டபம், கொக்குவில் சந்தி, பூநாறி சந்தி, சிவப்பிரகாசம் வீதிமருத்துவ பீட அரங்கம், பொக்ஸ் ரெஸ்ட் (பிறைவேட்) லிமிடெட், மருத்துவ பீடம், அச்சு கூடம் கே.கே.எஸ் வீதி, அன்னங்கை சந்தி – கோண்டாவில், இ.போ.ச டிப்போ – கோண்டாவில், ஞானபண்டிதா பாடசாலை கொக்குவில், குமரகோட்டம் – இணுவில், மாவடி, திருநெல்வேலி, நந்தாவில், பிரம்படி கொக்குவில், சைலோ ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி பிரதேசத்தில் 682 படைப்பிரிவு இராணுவப்படை முகாம் புதுக்குடியிருப்பு ஹைட்ராமணி, இரணைப்பாலை, கைவேலி (மருத்துவமனை), கோம்பாவில், புதுக்குடியிருப்பு மருத்துவமனை, புதுக்குடியிருப்பு பொலிஸ நிலையம், புதுக்குடியிருப்பு பிரதேச சபை, வானவில், திம்பிலி ஆகிய பிரதேசங்களிலும் மின்சார தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்