Fri. May 3rd, 2024

நாளை மின் வெட்டு நேரம் வடமராட்சியில் சில இடங்களில் கூடிய மின் வெட்டு

நாளை ஞாயிற்றுக்கிழமை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு இடம்பெறும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி வடமராட்சி பகுதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணிவரைக்கும், மாலை 6 மணி முதல் இரவு 7.20 மணிக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.
அத்துடன் உயர் மின்னழுத்த தாழ் மின்னழுத்த வேலைக்காக 2022-12-11 ஞாயிறு காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை
யாழ் பிரதேசத்தில்
பிரதிப் பொது முகாமையாளர் அலுவலகம் மின்சார சபை, ஆளுநர் விடுதி, யாழ் மாவட்ட செயலகம், துளசி மஹால், யு.எஸ் விடுதி, மருத்துவமனை வீதி, கச்சேரி நல்லூர் வீதி சந்தி, முலவை இரும்பு மதவடி, காளிகோவிலடி, சக்களாவத்தை, வதிரி – உடுப்பிட்டி பருத்தித்துறை வீதி சந்தி ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில்
மகாறம்பைகுளம் ஆகிய இடங்களிலும்
மன்னார் பிரதேசத்தில்
ஆவே மரியா ஐஸ் தொழிற்சாலை, கச்சேரி வளாகம், மன்னார் தொலைத் தொடர்பு நிலையம், கார்கில்ஸ் பூட்சிட்டி – மன்னார், கொன்வென்ட் வீதி, மன்னார் நகரம், மூர் வீதீ, நளவன்பாடி புதுத்தெரு (பள்ளிமுனை), இளையோர் சேவை மையத்தடி, பள்ளிமுனை, மன்னார் ஸ்ரீலங்கா டெலிகாம், புனித செபஸ்டியன் தேவாலயம், யு.சி மைதானம் -மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்