Sun. May 5th, 2024

நாளை பருத்தித்துறை, வவுனியா பிரதேசங்களில் மின் வெட்டு

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வியாழக்கிழமை  காலை 08.30 மணியிலிருந்து காலை 05.00 மணிவரை யாழ் பிரதேசத்தில் பருத்தித்துறை பகுதி மற்றும் வவுனியா பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. பருத்தித்துறை பகுதியில்

எஸ்.எஸ்கட்டிடம் , கல்லூரிவீதி , தம்பசிட்டி , கிராமக்கோடு , பருத்தித்துறை இலங்கை போக்குவரத்துச்சபை , பருத்தித்துறைசந்தை , சாலம்பை , சாரையடி , சிவன் , தம்பசிட்டிசந்தி , வி.எம் . வீதி , விஸ்வகுல வீதி ஆகிய இடங்களிலும் ,
வவுனியா பிரதேசத்தில் கற்கடந்தகுளம் , குருக்களூர் மன்னார் வீதி , குருக்கள்புதுக்குளம் – மணியர்குளம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்