Tue. Apr 30th, 2024

நள்ளிரவு முதல் பாணின் விலை உயர்வு

பேக்கரி உற்பத்திப் பொருட்கள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட பேக்கரிகள் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் கார்த்திகேசு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி பாணின் விலை 20 ரூபாவாலும், பணிஸ் வகைகளின் விலைகள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட பேக்கரிகள் உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் யாழ் மாவட்ட வெதுப்பக உரிமையாளர் கூட்டுறவுச் சங்கமும் இணைந்து இவ்விலை அதிகரிப்பை அறிவித்துள்ளனர்.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபருடன் குறித்த சங்கப் பிரதிநிதிகள் மேற்கொண்ட கலந்துரையாடலில்
யாழ் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1500 லீற்ரர் தேவைப்படுகின்ற போதிலும் ஒரு வாரத்திற்கு 800 லீற்ரர் தருவதற்கே யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார். இதனால் பேக்கரிகளை கொண்டு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவில் நல்லூர் பிரதேச செயலாளரினால் குறித்தளவு டீசல் வழங்கியமையால் இவ்வாரம் பேக்கரிகள் இயங்க முடியும். எனினும் அடுத்த வாரங்களில் பேக்கரிகளை கொண்டு நடாத்துவதில் அபாய நிலை உருவாகியுள்ளதாகவும் யாழ் மாவட்ட பேக்கரிகள் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் கார்த்திகேசு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்