நெல்லியடி ம.கல்லூரியில் பலநோக்கு வகுப்பறை கையளிக்கும் நிகழ்வு
யா/நெல்லியடி மத்திய கல்லூரியில் பல்நோக்கு வகுப்பறை கையளிப்பு நிகழ்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
கொமர்சியல் வங்கியின் சமூக பொறுப்பு உதவித் திட்டத்தின் (CSR) கீழ் புனரமைப்பு செய்யப்பட்டு உபகரண வசதிகள் வழங்கப்பட்ட பலநோக்கு வகுப்பறையினை மாணவர்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு எதிர்வரும் 2022.07.14 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு கல்லூரியின் அதிபர் திரு க.கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கொமர்சியல் வங்கியின் வட பிராந்திய முகாமையாளர் இராமச்சந்திரன் சிவஞானம், சிறப்பு விருந்தினராக கொமர்சியல் வங்கி நெல்லியடி கிளை முகாமையாளர் திருமதி.தபோதினி கஜரூபன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.