நயினை நாகபூசணி அம்மன் ஆலய குருக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்
இந்துமதக் குருக்களில் மேலும் யாழ்ப்பாணத்தில் ஒரு குருக்கள் இறந்துள்ளதையடுத்து அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் பிரதம குருக்களும் சர்வதேசஇந்துமத குருபீடாதிபதியுமான சிவஸ்ரீ சம்பு மஹேஸ்வரக் குருக்கள் நேற்று அதிகாலை உயிரிழந்திருந்தார்.
அவரின் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இணுவில் கந்தசாமி ஆலய குருக்கள் குருக்களும் அண்மையில் கொரோனாவால் இறந்தமை குறிப்பிடத்தக்கது