பருத்தித்துறையில் இருவர் உட்பட 13 பேருக்கு கொரோனா
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறை சுகாதார பிரிவில் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஒருவருக்கு நேற்று முன்தினம் திடீரென சுகயீனம் ஏற்பட்டதை தொடர்ந்து அவசர நோயாளர் வண்டியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஓடைக் கரைப் பகுதியில் கொரோனா தொற்றாளருடன் நேரடித் தொடர்பு கொண்ட பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இருவருக்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவரும், யாழ் போதனா வைத்தியசாலையில் ஒருவரும் சிறைச்சாலையில் ஒருவருக்கும் என 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட த்தில் ஒருவருக்கும், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும், மல்லாவி வைத்தியசாலையில் நால்வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.