Tue. Apr 30th, 2024

தோல்வியை ஒத்துக்கொண்டு கோத்தபாய ராஜபக்சவுக்கு வாழ்த்து தெரிவித்து சஜித், துணைத்தலைவ பதவியையும் ராஜினாமா

நடந்து முடிந்த 7 ஆவது ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய முன்னணியில் இருப்பதை தொடர்ந்து தோல்வியை ஒத்துக்கொண்டு கோத்தபாய ராஜபக்சவுக்கு வாழ்த்து தெரிவித்து சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . தான் மக்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு இந்த முடிவை ஏற்பதுடன் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். மேலும் தனது ஜனாதிபதி வேட்பாளருக்கான முடிவை ஆதரித்து துணை நின்றோர் மற்றும் தேர்தலில் தனக்கு ஆதரவாக நின்றவர்கள் மற்றும் வாக்களித்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.  மேலும் தேர்தல் முடிந்த பின்னர் தனக்கு ஆதரவு வழங்கிய நாட்டின் குடிமகனோ அல்லது ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர் எவரையும் துன்புறுத்த வேண்டாம் என்றும் கோத்தபாயாவுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் கடந்த 5 வருடகாலமாக வீடமைப்பு அமைச்சராகவிருந்து நாட்டுமக்களுக்கு இதயபூர்வமான சேவையை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த தோல்வியுடன் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத்தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்தார். தனது எதிர்கால அரசியல் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்