Tue. Apr 30th, 2024

கோத்தபாய,ரணில், மஹிந்த இன்று மாலை சந்திப்பு, நாளை புதிய அரசாங்கம் ?

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாகவுள்ள கோதபய ராஜபக்ஷ, பிரதமர் ரனில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையே கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.

இந்த கலந்துரையாடல் திரு கோட்டபய ராஜபக்ஷவின் மிரிஹானஇல்லத்தில் நடைபெற உள்ளது.

அரசியல் வட்டாரங்களின்படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியையும் ராஜினாமா செய்ய தயாராவுள்ளதுடன் , கோட்டபய ராஜபக்ஷவை தனது அரசாங்கத்தை அமைக்குமாறு கேட்டுக்கொள்ளவுள்ளார் என்று தெரியவருகிறது. இந்த நிலையில் நாளை புதிய பிரதமருடன் புதிய அரசாங்கம் அமையவாய்ப்புள்ளதாக தெரியவருகிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்