தேசிய மட்ட முதலாவது போட்டியில் முழங்காவில் ம.வி. கீரன் வெள்ளிப் பதக்கத்தை பதிவு செய்தார்
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட அரைமரதன் போட்டியில் முழங்காவில் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ் கீரன் வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ஆண்கள் பெண்களுக்கான 47வது தேசிய மட்ட தடகள தொடரின் முதல் நிகழ்வு இன்று சனிக்கிழமை கம்பகா மாவட்டத்தில் அரை மரதன் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்றது.
இதில் வடமாகாண முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.கீரன் வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.
47வது தேசிய மட்ட போட்டியில் முதலாவது பதக்கத்தை வென்ற வீரர் இவராவார்.