தேசிய மட்ட பரதநாட்டியம் மூளாய் சைவப்பிரகாச மாணவன் முதலிடம்
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தனிநபர்களுக்கிடையிலான பரதநாட்டிய போட்டியில் யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தை பிரதிநிதித்துவம் செய்த வி.தனுறாஜ் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட நுண்கலைப் போட்டிகள் அநூராதபுரத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் தரம் 10,11 மாணவர்களுக்கான தனி நபர்களுக்கான பரதநாட்டிய போட்டியில் யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தை பிரதிநிதித்துவம் செய்த வி.தனுறாஜ் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.