தேசிய மட்ட தடகளத் தொடர் 3ம் நாள் நிறைவில் வடமாகாணம் 6ம் இடத்தில்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
நேற்றைய 3ம் நாள் முடிவில் வடமாகாணம் 105 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது.
மேல் மாகாணம் 826 புள்ளிகளுடன் முதலாமிடத்திலும், வடமேல் மாகாணம் 346 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், மத்திய மாகாணம் 231 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும், தென் மாகாணம் 184 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும், சப்பிரகமுவ மாகாணம் 177 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திலும், வடமாகாணம் 105 புள்ளிகளுடன் ஆறாமிடத்திலும், வட மத்திய மாகாணம் 56 புள்ளிகளுடன் ஏழாம் இடத்திலும், ஊவா மாகாணம் 53 புள்ளிகளுடன் எட்டாம் இடத்திலும், கிழக்கு மாகாணம் 47 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.