Fri. May 3rd, 2024

தேசிய மட்ட குண்டு போடுதலில் ஜெயபுரம் மாணவன் தங்கம்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள போட்டியில் 14 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில்
கிளிநொச்சி ஜெயபுரம் மகா வித்தியாலயத்தைப் பிரதிதிதித்துவம் செய்த அன்ரன் அருண் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 14 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் கிளிநொச்சி ஜெயபுரம் மகா வித்தியாலயத்தைப் பிரதிதிதித்துவம் செய்த அன்ரன் அருண் 13.52 மீற்ரர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்