Mon. May 6th, 2024

தேசிய மட்ட காற்பந்து தேவரையாளி இந்துக் கல்லூரிக்கு  வெண்கலம் 

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட 18 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான கால்பந்தாட்ட தொடரில் வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரி அணி ஏக ஆதிக்கம் செலுத்தி  வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளனர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கால்பந்தாட்ட தொடரின் 3ம் இடத்திற்கான ஆட்டம் இன்று  புதன்கிழமை கொழும்பு தேஸ்ரன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
3ம் இடத்திற்கான ஆட்டத்தில் வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து ஜோசப்வாஸ் மகா வித்தியாலய அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தின் 10வது நிமிடத்தில் ஜோசப்வாஸ் மகா வித்தியாலய அணி ஒரு கோலைப் பதிவு செய்ய 12வது, 14வது நிமிடங்களில் தேவரையாளி இந்துக் கல்லூரி அணி வீரர் அஜய் அடுத்தடுத்து இரு கோல்களை போட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இதனால் முதல் பாதியாட்டத்தில் தேவரையாளி இந்துக் கல்லூரி அணி 2:1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டத்தில்  தேவரையாளி இந்துக் கல்லூரி அணி வீரர்களின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஜோசப்வாஸ் மகா வித்தியாலய அணி திணறியது.
இதில் தேவரையாளி இந்துக் கல்லூரி அணி வீரர்கள் லக்சன் 12வது நிமிடத்திலும், சுஜாந் 40வது நிமிடத்திலும், அஜய் 49 நிமிடத்திலும் அடுத்தடுத்து கோலைப் பதிவு செய்து அசத்தினர். அதன் பின்னர்  ஜோசப்வாஸ் மகா வித்தியாலய அணி வீரர் ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரி அணி 5:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்