Mon. Apr 29th, 2024

தேசிய மட்ட கபடி எதிரணிகளை துவசம் செய்து சம்பியனாகியது யாழ்மாவட்ட இளைஞர் அணி

தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட பெண்களுக்கான கபடிப் போட்டியில் யாழ்மாவட்ட இளைஞர் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் நடாத்தப்பட்ட அகில இலங்கை தேசிய மட்ட கபடிப் போட்டி நேற்று மகரகம இளைஞர் சேவை மன்ற உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் யாழ்மாவட்ட இளைஞர் அணியை எதிர்த்து குருநாகல் மாவட்ட இளைஞர் அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாழ்மாவட்ட இளைஞர் அணியின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் குருநாகல் மாவட்ட இளைஞர் அணி திணறியது. இதனால் யாழ்மாவட்ட இளைஞர் அணி 37:18 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்