Sat. Apr 27th, 2024

தென்னை மரத்தில் தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

ஏணியை வைத்து தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பருத்தித்துறை புலோலி மத்தியைச் சேர்ந்த ஆறுமுகம் நவரட்ணம் (வயது 65) என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏணியை வைத்து ஏறியுள்ளார். அப்போது அவர் தவறி விழுந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்