தும்பளை கடற்கரை சிறுவர் பூங்காவிற்கு செல்வதற்கு பொதுமக்கள் அச்சம்
மதுப் பிரியர்கள் அட்டகாசத்தால் பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட தும்பளை கடற்கரை சிறுவர் பூங்காவிற்கு செல்வதற்கு பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
பருத்தித்துறை நகர சபையின் பராமரிப்பில் தும்பளை கடற்கரை சிறுவர் பூங்கா மற்றும் பொது மக்களின் பொழுது போக்கும் இடமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறிது காலமாக மதுப்பிரியர்களின் அட்டகாசத்தால் சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்ட உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், மதுப் பிரியர்களால் பொழுது போக்குவதற்காக வரும் பொதுமக்களுடன் முரண்பாடுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் குறித்த சிறுவர் பூங்காவிற்குச் செல்வதற்கு பொதுமக்களால் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. மதுப்பிரியர்கள் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் நடவடிக்கை எடுப்பதோடு, சேதமாக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களை திருத்தித் தருமாறும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.