Mon. Apr 29th, 2024

துன்னாலை குடவத்தை பகுதிகயில் வழிப்பறி

டிப்பர் வாகனத்தின் சாரதியை கத்தியை காட்டி பயமுறுத்தி அவரிடமிருந்து 47 ஆயிரம் ரூபா பணம் வழிபறி செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை மதியம் வடமராட்சி துன்னாலை குடவத்தை பகுதியில் நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை நோக்கி துன்னாலை வீதியூடாக டிப்பர் வாகனத்தில் வந்த போது குறித்த பகுதியில் ஒருவர் சட்டர்தியற்ற கத்தியை காட்டி சாரதி வழிமறித்து, அவரிடமிருந்து 47 ஆயிரம் ரூபா பணத்தை அபகரித்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போது, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவர் குறித்த பகுதியில் மாடு, மற்றும் வழிப்பறி போன்ற திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் நபர் எனவும் தெரிய வந்துள்ளது. குறித்த நபரை வடமராட்சி பகுதியில் உள்ள நெல்லியடி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை பொலீஸ் பிரிவினரால் தேடப்பட்டு வருபவர் எனவும் தெரிய வந்துள்ளது.
அத்துடன் குறித்த வழிப்பறி தொடர்பாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்காக வருகை தந்த போது சுமார் 3 மணித்தியாலத்திற்கு மேலாக பொலீஸாரால் முறைப்பாடு பதியப்பட்டாமல் காத்திருந்தததாகவும் பணத்தைப் பறி கொடுத்தவர் விசனம் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்