சங்கிலியன் கல்தோரண வாசல் புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் முதலாவது செயல்திட்டம்
சங்கிலியன் கல்தோரண வாசல் புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்துக்கூறும் வகையில் நல்லூரில் காணப்படும் சங்கிலியன் தோரண வாசல் யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போகாமல் அவற்றைப் பாதுகாத்து எமது எதிர்கால சந்ததியினருக்கு அவ் மரபுரிமைச் சின்னங்களை ஒப்படைக்க வேண்டிய தார்மீகக் கடமையுடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் (JAFFNA HERITAGE CENTER) முன்னெடுக்கப்படும் முதலாவது செயற்றிட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.