துன்னாலையில் 32 வயது நபரின் சடலம் கண்டுபிடிப்பு
10.12.2020 இன்று விடியற்காலை துன்னாலை வடக்கு துன்னாலை பகுதியில் மழை நீர் நிரம்பிய இடத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துன்னாலை வடக்கை சேர்ந்த கிருஷ்ணன் சிவகுமார் வயது 32 என்பவரே மழை நீர் நிரம்பிய பகுதியில் இறந்து கிடக்கிறார் என்று தெரியவருகிறது. பருத்தித்துறை பொலிஸார் துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.