துன்னாலையில் இரண்டரை மாத சிசு கொலை!! -தாய்க்கு விளக்கமறியல்-
துன்னாலை குடவத்தையில் இரண்டரை மாத கைக்குழந்தையை கிணற்றி வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான தாயை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் பொ.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
மேலும் கொலை செய்யப்பட்ட கைக்குழந்தையின் தாய், தந்தையின் இரத்த மாதிரிகளை பகுப்பாய்வுக்குட்படுத்தவும், தாயாரின் உளநலம் தொடர்பில் உளநல மருத்துவ நிபுணரிடம் முற்படுத்தி சான்றிதழைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.