Tue. May 7th, 2024

தலைகீழாக மாறிய நிலைமை, வெளிநாட்டு பயணிகள் மற்றும் விமான சேவைகளுக்கு தடை விதித்த சீனா

அனைத்து வெளிநாட்டு பயணிகளும் விசா அல்லது குடியிருப்பு அனுமதி இருந்தாலும், அவர்களுக்கு தற்காலிக தடை விதித்து சீனா அறிவித்துள்ளது.

சீன மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களை வாரத்திற்கு ஒரு விமான சேவையை மட்டும் வழங்குமாறும் மட்டுப்படுத்துகிறது, மேலும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை 75% க்கும் அதிகமாக இருக்கக்கூடாது என்றும் அது அறிவித்துள்ளது

சீனா தனது முதல் உள்நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபொழுதும் , அதன் புதிய தொற்றுகள் அனைத்தும் இப்போது வெளிநாட்டிலிருந்து வந்தவை.

வியாழக்கிழமை சீனா முழுவதும் 55 புதிய தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டது – அவற்றில் 54 வெளிநாடுகளில் இருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்