Sun. Apr 28th, 2024

தரம் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஜனவரி 25 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள பாடசாலைகளைத் தவிர நாட்டின் அனைத்து பாடசாலைகளும் தரம் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஜனவரி 25 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சர் ஜி. எல் .பீரிஸ் தெரிவித்துள்ளார் .
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது இவ்வருடம் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளைத் தவிர அனைத்து பாடசாலைகளும் ஜனவரி 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன.
பாலர் பாடசாலைகளும் இதே முறையில் மீண்டும் திறக்கப்படும் என்றும்
, தரம் 1 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை பெப்ரவரி மாதம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார் .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்