பாடசாலைகள் 11 ம் திகதி ஆரம்பமாகும்
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த ஏனைய பாடசாலைகள் அனைத்தும் திட்டமிட்டவாறு எதிர்வரும் 11 ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். தற்போது கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் மேல் மாகாணத்தில் எதிர்வரும் 25ம் திகதி தரம் 11 மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.