Mon. May 6th, 2024

ஜனாதிபதி தேர்தலை நேரடியாக கண்ணாணிக்கவுள்ள 100 வெளிநாட்டவர்கள்!!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கண்ணிக்க 4 குழுக்கள் உட்பட 100 வெளிநாட்டவர்கள் பணியில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வந்துள்ள பொதுநலவாய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் இருவர் தேர்தல் திணைக்களத்துடன் தொடர்புகொண்டுள்ளனர் என்றும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

பொதுநலவாய ஒன்றியத்தின் சார்பில் 20 கண்காணிப்பாளர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 60 காண்காணிப்பாளர்களும் இலங்கை வரவுள்ளனர். இவர்களுள் பலர் நாளை வரவுள்ளதாகவும் செயலகம் தெரிவித்துள்ளது.

சார்க் அமைப்பில் இருந்தும் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளனர். இவர்களில் இந்திய தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் இடம்பெறுகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தேர்தலுக்கு முன்னரும், தேர்தலுக்கு பின்னருமான நிலைமைகளை கண்காணிப்பார்கள் என்றும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்