Thu. May 2nd, 2024

ஜனாதிபதியின் நெருங்கிய சகாக்கள் என கூறி மோசடியில் ஈடுபட்டிருந்த இருவர் கைது!

ஜனாதிபதி கோட்டபாய பெயரை பயன்படுத்தி அரச வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றவியல் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜாங்கனை மற்றும் செவனகல பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புத்தேகம பிரதேசத்தில் வசித்து வரும் பெண் ஒருவரிடம்  ஒன்றரை இலட்சம் ரூபாயை பெற்றபோதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்