Mon. May 6th, 2024

செஞ்சோலை காணி பிணக்கு! மூக்கை நுழைத்த டக்ளஸ் மக்களுக்கு உத்தரவாம் வழங்கினாராம்.

செஞ்சோலை காணியிலிருந்து வெளியேற நிா்ப்பந்திக்கப்படும் மக்களை நாடாளுமன்ற உறுப்பினா் டக்ளஸ் தேவானந்தா இன்று நோில் சென்று பாா்வையிட்டிருக்கின்றாா்.

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லம் அமைந்துள்ள குறித்த காணியில் 54 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்து இன்று குடும்பங்களாக  வாழ்வை ஆரம்பித்துள்ள குடும்பங்கள் குறித்த கணியை படையினர் விடுவித்ததை அடுத்து அங்கு குடியேறி வாழ்வனை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த காணியில் குடியேறியுள்ள செஞ்சோலை குடும்பங்களை 15.10.2019ம் நாள் அல்லது அதற்கு முன்பதாக வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை குறித்த பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்  மேற்கொண்டு குடும்பங்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

குறித்த காணியின் உரிமம் தொடர்பில் தீர்க்கமான தீர்வொன்றை பெற்றுத்தருவதாக அவர் தெரிவித்தார். காலம் கடந்த நிலையில் குறித்த பிரச்சினையை என்னிடம் தந்துள்ளீர்கள்.

இந்த பிரச்சினை முற்கூட்டியே எனக்க கிடைத்திருந்தால் தீர்வை உடனே பெற்றிருக்க முடியும். தற்புாது நான் அரசில் இல்லை. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

இந்த பிரச்சினை தொடர்பில் உடர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.  விரைவில் குறித்த காணி விடயம் தொடர்பில் திருப்திகரமான தீர்வை பெற்றுத்தருவேன் என அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வழங்கிய வாக்குறுதிகளை என்றும் நிறைவேற்றியது கிடையாது.  ஆனால் நான் அவ்வாறு அல்ல. செய்வதையே சொல்வேன். என்னை நம்புங்கள்.

இந்த விடயத்தை செய்து முடிப்பதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும். புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதை அடுத்த இப்பிரச்சினைக்கு நிரந்தரமானதும்,

திருப்திகரமானதுமான தீர்வை பெற்றுத் தருவேன் எனவும் செஞ்சோலை சமூகத்திற்கு அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்