Fri. May 3rd, 2024

சுன்னாகம் பகுதியில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

யாழ்ப்பாணம் – சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்கிழமை மாலை குறித்த இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தெரியவருவதாவது,

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் என்ற 36 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

அயல் வீட்டுக்காரர்களான உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது வாய் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்ட போது ஒருவர் கொட்டினால் தாக்கம் உட்பட்ட போது மற்றவர் கத்தியால் குத்தியுள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த 57 வயது ஆன சந்தேக நபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்